Pochonia chlamydosporia மற்றும் Purpureocillium lilacinum – நீடித்த வேளாண்மைக்கான நிலையான தீர்வு
பயிர் சாகுபடியில் உற்பத்தியை பாதிக்கும் காரணிகளில் நிலையற்ற தட்பவெப்ப சூழ்நிலை, பூச்சி மற்றும் நோய் தாக்குதல், களைகள் மட்டுமல்லாமல் கண்களுக்குப் புலப்படாத

நூற்புழுக்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. மண்ணில் வாழும் இந்நுண்ணுயிர் போன்ற விலங்குகள் தாவர வேர்களைத் தாக்கி நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறனை குறைத்து, பயிர்களின் வளர்ச்சியையும் மகசூலையும் பெருமளவில் பாதிக்கின்றன.
தோட்டக்கலை பயிர்களில் சுமார் 10 – 30 சதவீதம் வரை மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்தும் திறன் உடையது.
*நூற்புழு (Nematode) என்றால் என்ன?*
நூற்புழுக்கள் (Plant Parasitic Nematodes) என்பது மண்ணில் வாழும் மிகச் சிறிய, நீளமான, நூல் போன்ற நுண்ணுயிர் விலங்குகள் ஆகும். இவை தாவர வேர்களில் ஊசி போன்ற ”Stylet” என்ற உறுப்பை நுழைத்து சாற்றை உறிஞ்சி சேதப்படுத்துகின்றன.
*முக்கிய தீங்கு விளைவிக்கும் நூற்புழுக்கள்

1.வேர்முடிச்சி நூற்புழு – Root-knot nematode (Meloidogyne spp.)
2.மொச்சை வடிவ நூற்புழு – Reniform nematode (Rotylenchulus reniformis)
3.வேர்குத்தும் நுற்புழு – Pratylenchus spp
4.சிட்ரஸ் நுற்புழு – Tylenchulus semipenetrans
5.வாழை துளைக்கும் நூற்புழு – Radopholus similis
6.சுழல் நூற்புழு – Helicotylenchus spp
இவை வாழை, தக்காளி, மிளகாய், கத்திரி, வெண்டை, மா, மாதுளை, பப்பாளி, கொய்யா, எலுமிச்சை உள்ளிட்ட பல பயிர்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்துகின்றன.
*நூற்புழு தாக்குதலின் அறிகுறிகள்:*
வேர்களில் முடிச்சுகள் உருவாகுதல்
வேர் வளர்ச்சி குறைதல்
சத்துக்களை உறிஞ்சும் திறன் குறைதல்
குன்றிய பயிர் வளர்ச்சி
இலை மஞ்சளாதல்
வறட்சியை தாங்கும் திறன் குறைதல்

பூ மற்றும் காய் உதிர்தல்
மகசூல் குறைதல்
நூற்புழு தாக்குதலின் அறிகுறிகள்
ஊட்டச்சத்து குறைபாட்டு அறிகுறிகளை ஒத்து இருப்பதால் அளவுக்கு அதிகமாக உரம் இடுதலை தவிர்த்து நூற்புழு தாக்குதல் உள்ளதா என்பதை கண்டறிந்து அதற்கேற்றவாறு உயிரியல் முறையில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*உயிரியல் முறையில் நூற்புழுக்களை கட்டுப்படுத்துதல்:*
நூற்புழுக்களை கட்டுப்படுத்த பிரதானமாக இரண்டு பூஞ்சாணங்கள் பயண்படுத்தப்படுகிறது.
1.Pochonia chlamydosporia
2.Purpureocillium lilacinum

*முக்கிய வேறுபாடுகள்*

*பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்*
நூற்புழு முட்டைகள் மற்றும் பெண் நூற்புழுக்களை அழிக்கிறது.
வேர் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
பயிரின் வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரிக்கும்.
இரசாயனப் பயன்பாட்டை குறைக்க உதவுகிறது.
பயன்படுத்தும் போது கவணிக்கப்பட வேண்டியவை
முழு பலன் பெற மண்ணணை ஈரப்பதமாக வைத்திருங்கள்.
நேரடி வெயிலில் இருந்து பாதுகாக்கிறது.
பயன்படுத்தும் முன் லேபிளில் உள்ள வழிமறைகளை பின்பற்றவும்.
முடிவுரை:
நூற்புழுக்கள் கண்களுக்குப் புலப்படாத எதிரிகள் என்றாலும், அவை ஏற்படுத்தும் இழப்பு மிகப் பெரியது. இவற்றை கட்டுப்படுத் Pochonia chlamydosporia மற்றும் Purpureocillium lilacinum போன்ற நன்மை பயக்கும் பூஞ்சாணங்களை பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு உகந்த, அறிவியல் பூர்வமான மற்றும் பொருளாதார ரீதியாக பயனுள்ள தீர்வாகும்.

மண் வளத்தை காக்கும் இந்த உயிரியல் தொழில்நுட்பங்களை விவசாயிகள் பரவலாக ஏற்றுக்கொள்வதே எதிர்கால நிலையான வேளாண்மைக்கான முக்கிய அடித்தளமாக அமையும்.

More Stories
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சம்பா / தாளடி பருவத்தில் பயிரிட எற்ற புதிய நெல் நெல் சாகுபடிக்கு ரகங்களும் அவற்றின் குணாதிசயங்களும்,
ஐசிஏஆர்-கரும்பு இனப்பெருக்க நிறுவனம்…ஒரு பார்வை
சாகுபடி / நோய்மேலாண்மை